படம் பார்த்து கவி: தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன்

by admin 2
65 views

தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன்

அன்று கரி பாத்திரம் முதல்
அனைத்து பாத்திரங்களுக்கும்
அதிரடியாக தேய்ப்பதற்கு
அவசரமாக உதவியது
அன்றைய தேங்காய் நார் மட்டுமே.
அதை உணர்ந்த சிலர்
அதற்கு ஈடாக ஒரு
அவசியமான ஸ்பான்ஜினை
அழகாக கண்டுபிடித்துக் கொடுக்க
அதனால் என் வீட்டு பாத்திரங்கள்
அற்புதமாக ஜொலித்தது
அதற்காக உதவி
அந்தத் தேங்காய் நாரிற்கு
அதரம் விரிய விடை கொடுத்தேன்.

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!