படம் பார்த்து கவி: தேனமுது

by admin 2
110 views

அம்மாவெனும் முதல் முத்தாய்
நாவில் இனித்து
தித்திப்பை திவ்யமாய் தெளித்து
அறிவின் அடைக்கலமாய்
ஆழக் காலூன்றிய வேராய்
அடி நெஞ்சம்தனில்
பொங்கிப் பெருகிடும்
உயிரின் ஆதாரமாய்
உணர்வின் உச்சமாய்
தாய் மண் தருவித்து
திரவியமாய் ஊட்டிய தேனமுது
என் தாய்மொழி!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!