படம் பார்த்து கவி: நரக வாழ்க்கை

by admin 2
53 views

வானை முட்டும் கட்டிடங்கள்
மூச்சு முட்டும் கூட்டங்கள்
சாலையோர தேவதைகள்
சல்லாபிக்க அழைத்தாலும்
இல்லம் வந்த தேவதையை
உள்ளம் நிறைத்து விலகி செல்
பாதை மாறா பயணம் செய்து
இலக்கை நோக்கி நகர்ந்து செல்
எங்கும் ஓட்டம் எதிலும் பரபரப்பு
நகர வாழ்க்கைக்கு பழகிக்கொள்
நரக வாழ்க்கை என்று புலம்பாதே
புலம்பெயர்ந்து வந்து விட்டாய்
புலன்கள் விழிப்புடன் இருக்கச்செய்
பளபளக்கும் ஒளி கண்டு
விட்டில பூச்சியாக வீழாதே
சொர்க்கம் நரகம் என்று வானில் இல்லை
எல்லாம் இருக்குது உன் கையில்
சிந்தித்து சிறப்பாய் வாழ்ந்து விடு

  • அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!