படம் பார்த்து கவி: நல்ல பேய்

by admin 2
36 views

தூரத்தில் வெளிச்சப்
புள்ளிகள்..
மனிதன் புழங்கும்
இடங்கள்…
மரங்கள் அடர்ந்த
இருட்டில்…
பயம் காட்டவே ஒரு
வெளிச்சக் கம்பம்.
அதனடியில்
அலங்கார இருக்கை.

மரக்கிளையில்
மாய்ந்து போய்
மாறுதலுக்காய்
விளக்கடியில்
பெஞ்சில்
அமர்ந்தது அது!

டெட்டி பேர் ஆ
வெள்ளைப் பூனையா…
அருகில் போனேன்
ஆடிப் பார்க்க…
அரண்டு போனேன்
அதைக் காணாமல்
‘கெக்கெக்கே’ என
தேய்ந்த சிரிப்பில்
வேர்த்துப் போய்
அலறி ஓடினேன்…

திரும்பிப் பார்த்தேன்
பெஞ்சின் நடுவில்
சிரித்தபடி ‘வா..’வென
அதே பேய்…

S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!