படம் பார்த்து கவி: நாட்டுச் சக்கரை

by admin 1
38 views

ஆலைகள் அதிகம் தோன்றும் முன்
அனைத்து இடங்களிலும் ஆட்சி செய்தது

பார்க்க பளபளப்பாய்
பக்குவம் அதிகம் தேவையில்லை
பகட்டாய் மெல்ல நுழைந்தது சீனி

ஓரமாக போ நீ என்று
லாவகமாக ஒதுக்கினோம்
நாட்டுச் சர்க்கரையையும் கருப்பட்டியையும்

மெல்ல மெல்ல வெள்ளையன் உள்ளே வர
மெதுவாய் ஒதுங்கியது கருப்பும் பிரவுனும்

நாட்டு இனிப்பு மறைய
வெள்ளையன் கை ஓங்க
நீரிழிவு நோயும் பெருகியது

திடீரென சமூகம் விழித்தெழ
மீண்டும் வளம் வருகிறது
நாட்டுச் சக்கரை

— அருள்மொழி மணவாளன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!