படம் பார்த்து கவி: நெகிழி போத்தல்

by admin 1
70 views

வண்ணம் இல்லாத தண்ணீருக்கு வண்ணம் கொடுத்த நெகிழி போத்தல்

குட்டிப் பிள்ளைகளின் கையில் விரும்பிய வடிவில் நெகிழி புட்டி

நிறங்கள் பலவாம் தரங்கள் பலவாம்
தகுதிக்கேற்ப எல்லோர் கையிலும்

மக்காக மாறி மண்பாண்டம் மறந்தோம்
மட்கா நெகிழியால் போத்தல் செய்தோம்

நீண்ட நாள் உழைக்கும் என்று
நெகிழியின் பின் சென்று
நாமே நம்
நீண்ட ஆயுளை குறைத்துக் கொண்டோம்

— அருள்மொழி மணவாளன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!