மீண்டும் மீண்டும்
நேசிக்க என்ன
மிச்சம் இருக்கிறது?
கடந்து போன இரவின்
ஸ்பரிசங்களை மீண்டும்
அணைத்திட முடியுமா?
ஆழ்கடலில் விழுந்து
அழுது உருண்டாலும்
அடுத்த இரவை தானே
ஸ்பரிசிக்க முடியும்…
உன்னை நினைத்து
ஏங்குது மனம்..
உன்னையே மணாளனாக
உரிமைக் கொண்டாடி
திரிகிறது மனம்..
நீ பிரிந்து சென்ற பின்னும்
இன்னும் நேசம் கொள்கிறேன்
வெறுக்க முடியவில்லை..
நேசம் என்பது என்ன?
அது கொஞ்சம் கொஞ்சமாக
உயிரை மாய்க்க வைக்கும்
அமுத விஷமல்லவா…!
அடுத்த நொடி நிச்சயமற்றது
அதனால் தானோ
பிரிவின் துயர் தாங்காது
உயிர் வலியில் வாடும் என்னை
காலனவன் நேச கயிறு வீசி
தழுவிக் கொள்ள அழைக்கிறான்..
நேசத்தின் நேயம் அழிவதில்லை..
நேச கயிறு இறுக்குவதால்
நேசம் புரியபடுமெனின்
அந்த புரிதல் அர்த்தமற்றதே…!
அனுஷாடேவிட்