படம் பார்த்து கவி: நேர்மறை நோக்கிலே

by admin 1
40 views

வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோ
வழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமா
மாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்
தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதே
இயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமே
செயற்கையின் எதிர்மறை ஆற்றலை அகற்றுமே
எந்நிலையிலும் எளிதாய் செழித்தே வளர்ந்தே
தன்நிலையதால் சார்ந்தோர் செழிக்கவும் செய்திடும்

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!