படம் பார்த்து கவி: பசுமைத் தாளிப்பு

by admin 2
33 views

தனித்தனியாகப்
பிரிந்து நின்றாலும்
சேர்ந்தே வந்து
சமையலின்
வலது கையாக
உலா வரும்
உன்னதம் நீ..

தேங்காய் சட்னியோ
உனைப் பார்த்தால்
ஏங்கத்தான் செய்யும்
உனது வாசமில்லையெனில்
அதனழகு
கேள்விக்குறியாகிப் போக…
சுவையும்
சுமாராகிப் போகும்…

குழம்புகளின் வானில்
நீ என்றும்
வானவில்தான்!

பசுமைத் தாளிப்பின்
பயனறியாமல்
யரேனுமுளரோ!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!