படம் பார்த்து கவி: பாசம் நேசம்

by admin 1
66 views

பாசம் நேசம்
நட்பு காதல்
அனுசரிப்பு அரவனணப்பு
உழைப்பு வியர்வை
நேர்மை உண்மை
போன்ற பல முத்துக்கள்
சிந்தி சிதறாமல்
நம்பிக்கை எனும்
நூலில் கோர்த்த
முத்து மணி மாலையை
என் பாசத்துக்குரியவளின்
கழுத்தில் அணிவித்தேன்
அது அவள் கழுத்தில்
ஆடும் போதெல்லாம்
என் இதயம் ஆனந்தத்தில் தொட்டில் ஆடும்
ஆனால்
அவளது முத்து மாலை சிதறினால்
எனது வாழ்க்கை
எனும்
முத்து மாலை
சிதறிவிடும்…
M. W Kandeepan🙏🙏

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!