படம் பார்த்து கவி: பாதுகாவலன்

by admin 1
51 views

மகிமை நிறைந்த
மஞ்சள் என்னுடைய
மதி விரும்பும் பாதுகாவலன்
மண்ணில் விளைந்தாலும்
மமதையில்லா காவலன் மகிழ்ச்சியுடன் பூசி
மங்கை குளிப்பதால்
மருவும் பருவுமில்லா
மழ மழவென முகம் மின்னுமென
மலை போல நம்பலாம்…
மனிதரின் புற்றுநோய்
மசித்துப் போக்கும் நண்பன்
மஞ்சள் நிற வெயிலை
மனமகிழ்வோடு ரசிப்பேன்
மஞ்சளை தஞ்சம் அடைவதால்
மகிழ்வான வாழ்வுறுதி

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!