படம் பார்த்து கவி: ம(அமு)து

by admin 2
45 views

அமுதும் நஞ்சாகுமே
அளவதிகம் ஆகிவிடில்
மதி மயக்கும்
மது அதுவும்
அமுதெனவே ஆகிடுமே
அளவோடு அருந்திவிடில்
மயங்கும் மாயநிலை
மதி அடையாதே
தேவை எது
தெரிந்து வைத்து
அளவறிந்து அருந்திவிடில்
அத்தனையும் நலமாகுமே
இதயம் நலமாக்கும்
இரத்தமும் சுத்தமாக்கும்
சருமம் பொலிவாக்கும்
பருமனும் அளவாக்கும்
அருந்தும் முன்னும்பின்னும்
அதிகம் நீரருந்தணுமே
விரதமென உண்ணாமல்
புரதங்களும் உண்ணனுமே
அளவோடு அருந்தியே
நலமோடு வாழுவீர்

ஜேஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!