படம் பார்த்து கவி: மஞ்சளின் மகிமை

by admin 1
54 views

அனைத்திலும் முதன்மை

அதுவே மஞ்சளின் மகிமை

பிடித்தால் பிள்ளையார்

கரைத்தால் புனித நீர்

தெளித்தால் மங்கலம்

மளிகை சாமான் வரிசையிலும்

மாளிகை வாசலிலும்

மங்கல பூசையிலும்

இறுதி காரியத்திலும்

உணவிலும் மருந்திலும்

காலை கதிரவனின் மஞ்சள் ஒளியில் தொடங்கும் நாள்
இரவு மஞ்சள் பால் குடித்து உறங்கும் நாள் – ஏன்

மஞ்சள் பூசி குளித்து வரும் மங்கையை கண்டு மயங்காதவர் உண்டோ

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!