படம் பார்த்து கவி: மணி மணியாய்

by admin 1
102 views

மணி மணியாய்
வளரத்துடிக்கும் இலைகள்
வெட்டுப் பட்டாலும்
மணிக்கணக்காய்
காத்திருக்காமல்
விழுந்த கணமே
மீண்டெழும்
அதிசயப்படைப்பு நீ!

இலைகளின்
ஆளுமையால்
தொட்டுப் படரும்
தொடர் பயணம் நீ!

மணியை (பணம்)இலைகளில்
சுமந்த பசுமை நீ!
உனக்குள் இருக்கும்
மதிப்பு
உலகறியும் …

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!