படம் பார்த்து கவி: மதி(யறி)யா மதிப்பாய்

by admin 2
40 views

பசுந்தழைமிகு மரமருகே
வீசுதென்றலும் நறுமணமே

அறுசுவைதரும் உணவினிலும்
ஆறாசுவையிதன் சிறுமணமே

குழவி முதல் கிழவி வரை உலவிடவே

அளவிலாத நலங்களையும் வழங்கிடுமே

கறிகாய் பிற வாங்கயிலே கறிவேப்பிலை இனாமானதால்

கோபுரத்தில் இல்லையென்றோ குப்பையில் இட்டதற்கோ

குணமும் குறையலையே மணமும் மறையலையே

பணம் எதுவும் கொடுக்கலையே மதிப்பில்லையென எண்ணிடாதீர்

விலைவைக்கவியலா மதிப்புறு மதிப்பானதாலோ
மதியறியா மதிப்பானதோ

நிலையில்லா உலகினிலே நிலைத்திடுவோம் நாமும் நம் குணமதிலே

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!