படம் பார்த்து கவி: மதுவாகுதே

by admin 2
45 views

தாய்மை தந்தைமையென

இறைமையின் நிறைமையாய்

தோழமையில் தூயமையாய்

துவள்கையிலேயே துணையெனவாய்

துயரெலாம் துடைப்பவனாய்

தனிமையிலும் தன்னம்பிக்கையாய்

தனைத்தாழ்த்தியே எனையுயர்த்தவே

தயக்கமின்றி தனித்துயரவே

தூரமாய் தூரமாகியும்

துணையுணர்த்தும் தோழமையின்

அதீத ஆழ்ந்தன்பு

மதுவிலும் மதுவாகுதே…

ஜேஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!