படம் பார்த்து கவி: மனசு

by admin 1
54 views

பதை பதைக்குது மனசு
பருப்பெடுத்து நீ அளக்க
புரதம் இருக்கு என்று
புத்திமதி நீ சொல்ல
பருப்பு சாம்பாரை ஏற்குது
மனம் மெல்ல மெல்ல

அன்னத்தோடு ஆவின் நெய்
பருப்பு சாம்பாரோடு சேர்த்து பிசைய
நாவெல்லாம் நீர் சேரும்
நால் திசையும் மனம் கூடும்
கை விரலோடு ஒட்டியிருக்கும் சோற்றை
சட்டி விளிம்பில் வலித்தெடுக்தால்
வாய் திறக்குது அனிச்சை செயலாய்

You may also like

Leave a Comment

error: Content is protected !!