படம் பார்த்து கவி: மழைச்சாரல்

by admin 1
32 views

மழைச்சாரல்

கருமையான சூல்
கொண்ட மேகத்தில்
சலனங்களை சலித்த
சாரலாய் மழைத்துளி

மண்ணோடு மழை
கொண்ட நேசத்தில்
கலந்த சுவாசமாக
வீசும்  மண்வாசம்

தூறலின் மெட்டில்
சுருதி பாடும்
தென்றலின் நாதமாக
இடி மின்னல்

முற்றத்து சாரலில்
முந்தி வரும்
முதல் துளியின்
முத்தச்  சத்தம்

மழை நின்றாலும்
நிற்காத தூவானத்தில்
வர்ண ஜாலம்
காட்டும் வானவில்

இதமான குளிர்ச்சியில்
தேகம் தீண்டி
கேசம் கலைக்கும்
இதமான தென்றல்

மழையில் நனையும்
பறவையின் ஒலி
தெருவில் குடைகளின்
வண்ண அணிவகுப்பு

மழையை மழையாய்
மழலையாய் ரசித்து
அடுத்த சந்திப்புக்கு
காதலோடு காத்திருக்கும்
பூமியில் புன்னகையோடு  நான்…..

பத்மாவதி

You may also like

Leave a Comment

error: Content is protected !!