படம் பார்த்து கவி:  மாணிக்கமாகுமே

by admin 1
36 views

தரணி ஈன்ற தங்கம்
மற்சிற்பியின் மதிக்கரங்களால்
மறுவுருவெய்தும் மாணிக்கம்
மாசும் தூசும்
குத்தமும் சுத்தமும்
சுற்றம் சூழ்ந்தினும்
உடையான் உச்சி சூழ்
திரிபதாகை குளிரை
அள்ளித் தோய்த்து
தனக்குள் புதைத்து
ஆறிய நீரையும்
அமிர்தமாக்கிடும் அதிசயம்
ஆழமாய் சொல்கிறதே!
கனிவும் கசடும்
குமிந்த ஞாலம்தனில்
வேற்றெண்ணம் விலக்கி
நற்றெண்ணம் மட்டும்
நின்மதி சேர்த்தால்
மனமும் குணமும்
என்போல் மாணிக்கமாகுமே
உள்ளக்குளுமை
உனையும் சூழுமே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!