படம் பார்த்து கவி: முக(வரியிலா)நூல்

by admin 2
25 views

முகம் அறியாதவர்கள்
முகவரி ஆகின முகநூலிலே

அகம் அறிந்ததை
அயலவர் அறிந்திட
ஆவலாகியே

இகம் அறியா நிலையாகி
சுகம் இழந்திடும்
சோகம் ஆகிடுமோ

போகம் பெரிதல்லவே
யோகம் அடைந்திடவெனும் விவேகம் அறிந்திடில்

யுகம் உள்ள யாவருமே
நுகமிலா நுகமாகின
வழுவில்லா சினேகம் அறிந்திடுவோமே

முகநூலில்
முதல் வரி முதல்
முடிவு வரை
முன்பின் அறியாதவரெனினும்

அன்பின் முகவரியாகி இணைந்திருக்கும்
நற்பண்பில் நிலைத்திருப்போமே

ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!