படம் பார்த்து கவி: முதிர்கன்னி

by admin 2
51 views

பள்ளி சிறுமியாக
புள்ளி மானாக
துள்ளி ஆவலுடன்
புள்ளிக்கோலமிட்டாள்
வள்ளி என்ற பாவை

திருமண வயது அடைந்து வறுமையில் வாடியதால்
பொறுமை இழந்து
வெறுமையாக உணர்ந்தாள்.

காரணம்……….
பருவ வயது ஓடியதால்
முதிர் கன்னி ஆனதில்
ஓடியது இளமை மட்டுமல்ல
வாடிய புள்ளிமான்
ஓட்டமும் தான்

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!