விதையிலிருந்த விருட்சமே..
விருட்சத்தின் அனிச்சமே _ உன்னை
அள்ளியெடுத்தது என்
அன்பின் உச்சமே!
உச்சத்தை முகர்ந்தே
அச்சத்தை விலக்கி_
உன்
ஆடையென படர்ந்தேன் !
படர நீ கொடியல்லவே
எனை மடியில் தாங்கிய
வஞ்சியடி!
வஞ்சியென கொஞ்சிய நின்
மார்பில் சாய்ந்தேனே !
எனை மறந்து நின்
கைகளில் தவழ்ந்தேனே!
தேனென இனித்த
தேவதையே _ இனி குளம்பிக் கோப்பையிலே
குடியிருக்கலாமா!
குடித்து குளம்பி தாகம் தீர்ந்தாலும்
கோப்பை மட்டும்
இனிக்குமடா !
ஏனெனில் இது நாம்
கூடியிருந்த கோவிலடா!!!
✍🏼 தீபா புருஷோத்தமன்
படம் பார்த்து கவி: விதையிலிருந்த விருட்சமே
previous post