படம் பார்த்து கவி: வெண் ஆன்மா

by admin 1
32 views

சுடரால் அடராகி
ஆன்மா கரைந்து
அடையாளம் தொலைந்து
அருவமாய் கருவுருவமாய்
உருக்குலைந்த பின்னமும்
எஞ்சிய உயிரை
ஏதோ ஒரு பலனிற்காக
அர்ப்பணித்தே விடைபெறுகிறது
கருந்தோல் தரித்த
இவ்வெண் ஆன்மா!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!