அரூபியெனில்
அறிவுக்கெட்டியவரை
ஆண்டவனே
ஆண்டவனுக்கு
இருக்கிறதோ
இதுவெனவடிவமும்
ஈரேழுலகாழும்
ஈசனின்
உருவிதுவெனவே
உரைத்திடவியலுமோ
ஊராழ்வோரும்
ஊகித்தேனும்
எல்லோர் எண்ணத்திலும்
ஏக்கமாகியே
ஏற்றமாய்
ஐயமற ஐந்தவித்தவனாய்
ஒளிர்வித்து ஒளிர்பவனாய்
ஓங்கியுயர்ந்தே
ஓங்காரமாய்
ஔடதமிலா
ஔடதவாதியவனாய்
உருவமில்லா உறவெனவாய்
உடனிருந்தே
உயிரும் மெய்யுமாய்
உணர்விலெழுந்த
வரிகளுக்கு
வலிமையுடன்
உயிரளித்தே
விலகிடினும்
விலகிடுமோ
விலையேறிய
உருவமிலா அரூபியின் உறவிதுவும்
ஜே ஜெயபிரபா