எழுதியவர்: திவ்யாஸ்ரீதர்
பயணம் என்பது வெறும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல, நம்மை நாமே கண்டறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.
அடர்ந்த பனிப்பொழிவில், குளிர்ந்த காற்று முகத்தில் அறையும்போது, அந்த உணர்வுகளையே ரசிப்பது ஒரு சுகமான அனுபவம்.
யூக்கலிப்டஸ் மரங்கள் வரிசையாக நிற்கும் அந்த அழகிய மலைப்பாதைகள், கண்களுக்கு விருந்து படைத்தன.
அந்தப் பனி படர்ந்த மலைப்பாதையில், என் பெயர் எதிரொலிக்கும்படி உரக்கக் கத்தியபோது, என் மனதிலிருந்த பாரங்கள் அனைத்தும் மறைந்துபோனது போல உணர்ந்தேன்.
அந்த இடத்தில், கடந்த கால கவலைகளையும் எதிர்கால திட்டங்களையும் மறந்து, நிகழ்காலத்தின் மகிழ்ச்சியை மட்டுமே சுவாசித்தேன். இந்தப் பயணம், பல இன்பத் தருணங்களை அள்ளித் தந்து, வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளைப் பதித்துச் சென்றது.
எழுத்தாளர்களின் புத்தகங்களின் வாயிலாக என்றோ ஒருநாள் நிஜத்தில் நடக்கும் என்று ஆசையோடு.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.