எழுதியவர்: அருள்மொழி மணவாளன்
மெய் எழுத்து: க்
“க்குக் க்குக் க்குக்” என்று குரல் எழுப்பி தன் சாம்பல் நிற கோழியை தேடிய மாலதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கோழி நிச்சயம் பக்கத்து வீட்டில் தான் இருக்கும் என்று முழுமையாக நம்பினாள்.
இரண்டு தெருவையும் சுற்றிச்சுற்றி தேடிய பிறகும் கோழி கிடைக்காததால், பக்கத்து வீட்டு வாசலில் நின்று, அவர்களுடன் சண்டை போட ஆரம்பித்தாள், தங்கள் வீட்டு கோழியை திருடியதற்காக.
பக்கத்து வீட்டு பெண்ணும் லேசு பட்டவள் அல்லவே.
இரு பெண்களும் தலைசிறந்த பேச்சாளர்கள் போல, வார்த்தைகளில் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
ஊரே அவர்களது சண்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் வார்த்தைகள் தடிக்க, இரு வீட்டு ஆண்களும் தங்கள் மனைவியை தடுக்க போராடினார்கள்.
ஒரு வழியாக இருவரையும் பிரித்து அவரவர் வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு சென்றார்கள்.
அங்கே இரண்டு வீட்டிற்கும் பொதுவான இடத்தில் இரு வீட்டு மகன்களும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதை கண்டு அருகில் சென்று பார்க்க,
சப்பாத்தியில் கோழி கறி குழம்பை முக்கி, மாலதியின் மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் பக்கத்து வீட்டு மகன்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.