10 வரி போட்டிக் கதை: ஏக்கம்

by admin 1
74 views

கிராமத்திலிருந்து லீவுக்கு வந்திருந்த பெரியப்பா பெண் வைஷாலியுடன் தன் மொபைலில் பிளே ஸ்டேஷன் டவுன்லோடு செய்து … விளையாடினான் வைபவ் . முன்பெல்லாம் அவள் வரும்போது இருவரும் விளையாடும் கேரம், செஸ் , லுடோ  எல்லாம் அந்த அறையின் ஒரு மூலையில் ஏக்கமாக அவர்கள் மொபைலில் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தன .

வைஷாலிக்கும் அதே நிலைதான் …. அவற்றை நோக்கி மன்னிப்பு கேட்கும் பாவனையிலான பார்வையைச் செலுத்தி…. ஏக்கப்பெருமூச்சு விட்டாள் .

சை … சதி பண்ணுது இந்த மொபைல் ….. ஆன்  ஆகவே மாட்டேங்குது ….

கடைல கேட்டா ..ரிப்பேர் பண்ண ஒரு வாரம் ஆகும்கிறான் … வைபவ் சலிப்போடு சொல்ல…அங்கிருந்த விளையாட்டுப் பொருட்களுக்கெல்லாம் ஒரே குஷி.. வைஷாலிக்கும்தான்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!