- நீரும் சேரும் *
பூமி தாயின்
தேகத்தை சிதைத்தது நீரும்,
மனிதன் காலும்;
பொன்னிற உன் மேனியின்
மேலே பாத படலங்கள் தாராளம்,
காலடி தடத்தில் கூட நீரை
செமிக்கும் இயற்கை
அன்னைக்கு இணையான
அதிசயம் வேறில்லை;
தேங்கி நிற்கும் தண்ணீர் துளிகளுக்கு தெரிய
வாய்ப்பில்லை எதிர் காலத்தின்
வாழ் வாதாரம் நாம் என்று…!!! ✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
படம் பார்த்து கவி: நீரும் சேரும்
previous post