படம் பார்த்து கவி: பாதாம் பால்

by admin 2
56 views

அவள் என் இல்லம் தேடி
முதன் முதலாக வந்தபோது
காபியா தேநீரா கனிவோடு வினவ
காபி தேநீர் அருந்துவதில்லை
மறுத்தவளிடம் ஒரு கோப்பை
பாதாம் பாலை அன்புடன் அளிக்க
அதை அவள் ஆசையோடு
பருகக் கண்ட காபி தேநீர்
பொறாமை கொண்டன.

க.ரவீந்திரன்‌

You may also like

Leave a Comment

error: Content is protected !!