படம் பார்த்து கவி: மழலைத் தவளை

by admin 1
97 views

மழலைத் தவளையை கயலென களித்தேன்
கயலில்லை தலைபிரட்டை என தவித்தேன்
தவளை அச்சத்தில் கவலையில் இருப்பேன்
சத்தம் என்றாலோ தாய் மடி தேடி தவிப்பேன்

இளமையில் தவளையை ஏனோ ரசித்தேன்
அதன் சத்தம் மோகமுத்தம் என களித்தேன்
பாறை க்குள் தேரை கண்டு வியப்பேன்
மனிதன் போலே உடல் மாற்றம் உண்டு
கொசு அழிக்க மனிதனுக்கு உற்ற துணை
நீயின்றி வேறில்லை என்று முடிப்பேன்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!