படம் பார்த்து கவி: கண்ணூறு

by admin 1
54 views

இதழ்மொட்டுக்குள் இளமெட்டுக்கள்
இசைக்கவோ புசிக்கவோ
இமைக்காமல் ரசிக்கவோ!!
இறை விரற் தூரிகை
இயற்கையின் இறக்கையில்
இயற்றிய ஓவியமோ!!
அலையலையாய் அமைந்திட்ட
அணிமுத்தழகில் அதிசயத்து
ஆண்டவனும் அணிவித்தானோ
அடுக்கடுக்காய் ஆடையினை
கண்ணூறு காணாதிருக்க!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!