படம் பார்த்து கவி: திசையெங்கும்

by admin 1
65 views

திசையெங்கும் உள்ள
தேநீர் கடைகளில் எல்லாம்
அவனது இராஜ ராகம்
ஒலித்து கொண்டே இருந்தது
துபாயிலிருந்து
அப்பா வாங்கி தந்த
சோனி டேப்ரிக் கார்டில்
எப்போதாவது தான்
எஃப் எம்மில் அவனது குரலை
கேட்க முடிந்தது
ஜனனி என அவன் குரல் ஒலித்தாலே
ஜகம் அவன் இசை தான் என
சொல்ல தோன்றியது
மாங்கா பத்தை,தேன் மிட்டாய் வாங்க
அம்மா கொடுத்த
பாக்கெட் மணிகளை எல்லாம் சேமித்து
முப்பது ரூபாய் கொடுத்து
வாங்கி வரும் கேசட்டை
நிஜமாலுமே
ரீல் கிழிய,கிழிய
ஒட்டி வைத்து
கேட்ட வரலாறு உண்டு
ஏனோ
இப்போதெல்லாம் வலைதளங்களில்
கோடான கோடி
இளம் இசையமைப்பாளர்களின் இசை கொட்டி கிடந்தாலும்
அவன் மிச்சம் வைத்த
இசைக்கு ஒரு துளிக்கு கூட ஈடாகாது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!