படம் பார்த்து கவி:  யசோதை நானன்றோ!

by admin 1
51 views

எண்ணத்தையும் எழுத்தையும்
காட்சியையும் ஓசையையும்
அசை பிரித்து சீர் தூக்கி
பூஜ்ஜியம் ஒன்று என்று
அதிர்வெண் ஆக மாற்றி
காற்றின் அலைவரிசையில்
ஒளியின் வேகத்தில்
கடத்தி சென்று
காட்சி படுத்தும்
அற்புத படைப்பே!

மண்ணை உண்ட
கண்ணன் வாயில்
உலகம் கண்ட யசோதை போலே
கருப்பு வண்ண கண்ணாடியில்
சுற்றும் உலகம் காட்டும்
கண்ணன் நீ யென்றால்
யசோதை நானன்றோ!

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!