படம் பார்த்து கவி: தாகம் தீர்க்கவே

by admin 1
58 views

நிறம் தரம் வேறெனினும்

நிரப்பிடும் நீரின் தரம்
நிரந்தரமன்றோ

தன்னிகரிலா தண்ணீரிலும்

தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம்

வெளியழகில் ஒன்றுமில்லை
உள்ளுணரப்படிலென,

வெளிப்படையாய் உள்ளுணரச் செய்யும் உதாரணமாய்..

வண்ணமும் வடிவமும் வேறெனினும்

எண்ணமெலாம் தாகம் தீர்ப்பதுவே!!

குமரியின்கவி
சந்திரனின்சினேகிதி

சினேகிதா ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!