படம் பார்த்து கவி: அன்புத் துவரையே

by admin 1
41 views

அளவெடுத்து அச்சடித்த
சந்தனப் பொட்டாய்
வட்ட வடிவில்
வாசம் நிறைந்து
வயிற்றை நிரப்பும்
வல்லவனே!
விதவித சுவையில்
வகைவகை வடிவில்
மிகைமிகை சத்தில்
பருப்பு பலவை இருந்தும்
ருசிக்கான போரில்
வாகை சூடி
பசிக்கான போரில்
அரியணை ஏறிடும்
அன்பிற்கினியோன் நீயன்றோ!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!