படம் பார்த்து கவி:  மணி ப்ளன்ட்

by admin 1
34 views

நீ இருக்கும் இடம்
செல்வம் செழிக்குமாம்
பணம் கொட்டுமாம்
வீட்டைச் சுற்றி உன்னை வளர்த்தேன்
காணும் இடமெல்லாம் நீ
மீன் தொட்டியிலும் நீ
கண்ணாடி பாட்டில் எல்லாம் நீ
ஏன் சமையல் அறையில் கூட நீ
பணம் என்ன இலை கூட கொட்டவில்லை
ஆனால் கிடைத்தது புத்துணர்ச்சி

காலை எழுந்ததும் அவசர அவசரமாக
சமையலறை வந்தால்
உன் பின்னே ஆதவனின் ஒளியில்
பிரகாசமாக மின்னுவாய்
இன்ஸ்டென்ட் காஃபி குடித்தது போல்
இன்ஸ்டென்ட் புத்துணர்ச்சி தோன்றும்

பால்கனியில் அமர்ந்து தேநீர் அருந்தும் போது
தென்னையில் ஒட்டிப் படர்ந்து
ஓங்கி வளர்ந்து பெரிய
இலையை காண்கையில்
உன் இலையில் துயில் கொள்ள
துடிக்கும் மனம்

பணம் வருதோ இல்லையோ
மணிமணியான உன் இலை காண்கையில்
கோடி பணம் கண்ட மகிழ்ச்சி தோன்றும்

செடிச்செடியாக வைத்தால் பணம் வராது

படிப்படியாக உழைத்தால் வரும் பணம்

— அருள்மொழி மணவாளன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!