படம் பார்த்து கவி: கிழிந்த ஆடையும் நவீன கலாச்சாரமும்

by admin 1
83 views

உழைப்பவரின் இலகு உடை, நவினமாக மாறியதேன்?
சுரங்கத் தொழில் கடினமானது,
உடையும் கடினமாதேன்?
அவை இளைய தலைமுறையிடம்
எளிதாய் போனதேன்?
கந்தலானாலும் கசக்கி கட்டும்
நம் கலாச்சாரம்,
கிழித்து கிழித்து அணியலானதேன்?
வெளிநாட்டவர்
நம் கலாச்சாரத்திற்கு மாற,
நம் நாட்டவர் அயலான் மோகத்தில்
கட்டுண்டதேன்?
ஏன்? ஏன்?
விடை தெரியாத கேள்விகளாய் பல ஆனாலும் காலமே பதிலாய்?
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!