படம் பார்த்து கவி: பரந்து விரிந்த களம்

by admin 2
134 views

பரந்து விரிந்த களம்
பார்த்துப் பார்த்துப்
பூரித்துப் போனேன்
ஆதி வேரின்
அடையாளம் அறிய முற்பட
முன்னோனின் முகவரியை
நினைக்க நினைக்க
ஆழியின் ஆழதேசம் போல்
அத்துணை அழகையும்
இழை இழையாய்ப்
பிரித்து நோக்க
முத்து முத்தாய்ப்
பிறப்பெடுத்த
முத்தமிழின் அழகை
எடுத்தோதிட
இப்பிறவி போதாது
தமிழலை ஓய்வில்லாமல்
சொற்களின் சிறகுகளால்
ஒலித்துக் கொண்டு
பயணப்படும் இப்புவியில்
எப்பொழுதும்
எப் பொழுதும்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!