எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
பாரிஸ், உலகத்தின் காதல் மற்றும் கலை நகரம். ஈஃபிள் கோபுரத்தின் பிரம்மாண்டத்தையும், இரவு நேரத்தில் அதன் ஒளி வெள்ளத்தையும் காண எனக்கு ஆசை.
அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்தில், புகழ்பெற்ற மோனாலிசா ஓவியம் உள்ளிட்ட அரிய கலைப்படைப்புகளைக் காணலாம். மான்மார்ட் பகுதியில் உள்ள கலைஞர்களின் படைப்புகளை ரசிப்பதும், வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரெ-டாம் தேவாலயத்தின் அழகை வியப்பதும் மனதிற்கு இதமான அனுபவம். சீன் நதிக்கரையில் நடக்கும்போது, மனம் ஒருவித அமைதியைப் பெறும். பிரெஞ்சு ரொட்டி, சுவையான பேஸ்ட்ரிகள், மற்றும் கஃபேக்களில் அமர்ந்து காபி அருந்துவது எனக்கு மிகவும் பிடித்தமானவை. கலை, காதல், மற்றும் உணவை அனுபவிக்க, பாரீஸ் செல்வது என் கனவுப் பயணம்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.