படம் பார்த்து கவி: வேண்டும் மரம்

by admin
106 views

வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்
பற்றிப் பற்றிப்
பாசமாய் வளர்வேன்
கருவினை புவியில்
விட்டுச் செல்வேன்
காற்றாய்க் கலந்து
காலமாய் நிற்பேன்
எங்ஙனம் வேர்கள்
விரவி நிற்கும்
என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்
தன்னையே தான்
அழிப்பது சிறப்பா?
சிந்தி செயல்படு
முந்திய மானிடரே!
கவிஞர்
சே. முத்துவிநாயகம்

You may also like

Leave a Comment

error: Content is protected !!