படம் பார்த்து கவி: இருளேற்றும்

by admin 1
103 views

இருளேற்றும் இரவுகளுக்கு உன் நிறம்

மாறி மாறி கனவு கொள்ளும்

பிரபஞ்ச ரகசியமொன்றை இமைமூட தருகிறாய்

உன் சுவாசம் இழுத்து உயிர்க்கும்

அந்த மேகச்சிதறல்களின் மென்சுமை உடைய

பேரன்பு கொள்ளும் கருணையற்ற நினைவுகளால்

விழி திறக்காமல் கிடக்கும் என் வானத்தில்

விண்மீன் கற்றைகள் நம் வீதியெங்கும் விழுந்தோடுகிறது

உயிரோடு உயிர் தழும்ப அணைத்துக்கொள்ளும்

உன் நினைவின் பிம்பம் தான்

இந்த பெருவெளியின் அத்தனை சாயலாய் பரவியிருக்கிறது ….

🌺 நிழலி

You may also like

Leave a Comment

error: Content is protected !!