படம் பார்த்து கவி: புதிதாய்

by admin 1
102 views

புதிதாய் முளைத்த கலாச்சாரம்

பிறந்தநாள் அன்று
கோயிலுக்குச் சென்று
சாமியை தரிசித்து
ஆசி வாங்கி
தன்னால் முடிந்தவரை
பிறருக்கு உணவு படைத்து
வீட்டினில் விளக்கேற்றி
பெரியவர்கள் இடத்தில்
ஆசி வாங்கி
கொண்டாடிய திருநாட்கள்
அப்பொழுது…

அடுக்கடுக்கான அணிச்சலில் மெழுகுவர்த்தியை வைத்து
ஊதி அணைத்து
வாழ்த்துப்பாடலுடன்
இனிப்பை வெட்டி
கொண்டாடப்படுகிறது
இப்பொழுது…

  • அருள்மொழி மணவாளன்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!