கடவுளின் தேசம்… மலைச் சரிவில் வளைவுகள் பிரியும் பாதையில் ஓர் அழகிய வனம் மெல்லிசை கூட்டும் சிறு பாறைக் கற்களில்…
படம் பார்த்து கவி
சலனமற்ற பாதைசலசலத்து ஓய்ந்தமரங்களோடு மனமும்நட்டநடு வானில்விண்மீன் வெளிச்சத்தில்நிலவும் நினைவும்சத்தமின்றி சலனமின்றிபேச வார்த்தைகளின்றிதனிமையே துணையாகஅமைதியே ஆறுதலாய்தென்றலாக தழுவிகற்பனை ஊற்றாகநிச்சலமாக நீளும்நேசத்தில் ஓர் ஏகாந்தம்…
நீள அகலத் தெருக்களில் மனம்வட்டம் போட மறுக்கிறதுஉயர கட்டபட்டகட்டிடத்தை கட்டியவன்எங்கே இருக்கிறானோவீடு வாசல் இன்றிதவிக்கிறானோஇங்குவீதி விபத்துகளும் ஏராளம்திருட்டு மோசடிகளும்தாராளம்அமைதியற்றுநிம்மதி இல்லாதுஇயந்திர மனிதர்களாகஇங்கு…
அதிகாலை…..சில்லென்ற காற்றில்ஊஞ்சலாடும் மரங்களின் பசுமையை தன்னுள்போர்த்திய நீலக்குளத்தில்நிறைந்த காதலோடு💓எழில்மிகு காட்சி🤔🤔நகரும் புள்ளியாக நீயும்….தொடரும் புள்ளியாக நானும்…. பத்மாவதி
ஒட்டுமொத்த சுத்தத்தையும்தனதாக்கிக் கொண்டு…தண்ணீர் பரப்பில்நீல நிறமாய்எழில்மிகு காட்சி…நூலிலையில் எத்தனை காலம்தப்பிப்பது..மானுடனின் வரவுசில விநாடிக்குள்நிகழ்ந்துவிடும் போலிருக்கிறது..அதற்குள்இரசித்து விடுகின்றேன்தூய்மையுடனான போராட்டத்தை… தனபாலதி ரித்திகா
