💠இடியாப்பத்திற்கான வெஜ் குருமா
♦️தேவையான பொருட்கள்:
🔸உருளைக்கிழங்கு – 1
🔸கேரட் – 1
🔸பீன்ஸ் – 5
🔸பச்சை பட்டாணி – 10
🔸பெரிய வெங்காயம் – 3
🔸பச்சை மிளகாய் – 2
🔸தக்காளி – 4
🔸மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
🔸தனியா தூள் – 2 தேக்கரண்டி
🔸மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
🔸தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
🔸முந்திரி – 10
🔸கசகசா – 2 தேக்கரண்டி
🔸தயிர் – 1 டம்ளர்
🔸ஏலக்காய் – 1
🔸கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
🔸பட்டை – சிறிது
🔸கிராம்பு – 2
🔸எண்ணெய் – 3 தேக்கரண்டி
🔸உப்பு – தேவையான அளவு
♦️செய்முறை:
✴️கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் மிகவும் பொடியாக நறுக்கி, பட்டாணியுடன் சேர்த்து வேக வைக்கவும்.
✴️பச்சை மிளகாயை நீளமாகவும்,வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
✴️தேங்காய் துருவல், முந்திரி, கசகசா மூன்றையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
✴️வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
✴️வதங்கிய பின் தக்காளி, மிளகாய் தூள், தனியா தூள், அரைத்த மசாலா, மஞ்சள் தூள், வேக வைத்த காய்கறிகள், உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
✴️குருமா நன்கு திக்காக வந்ததும் கடைந்த தயிர் சேர்த்து, சிறிது நேரம் கொதித்த பின் இறக்கி, இடியாப்பத்துடன் பரிமாறவும்.