படம் பார்த்து கவி: அத்தினியின் ஆசை

by admin 2
28 views

புத்தம் புதிய பூமியில்
பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவே
வேழம் ஒன்று கம்பீரமாக
வத்தகையை ருசிப்பதை கண்ட
அத்தினி ஆசை கொண்டு அருகே செல்ல
களிரோ நாட்டம் இன்றி கடந்தது பூவனம் நோக்கி
தும்பியோ துயர் கொண்டு தன்னை நோக்க
வழுவை வலுவாய் இருந்தும்
ஆனை தான் அழகில்லையோ என்றெண்ணி
ஓங்கலது ஒப்பனை செய்து
அம்பகம் முழுவதும் ஆசையை நயனித்து
பொங்கடி பொற்பாதமதில் வண்ணப் பூச்சுகள் பூசி
கும்பிக்காக காதலுடன் காத்திருந்தது அது வரும் வழியே…
யார் அதற்கு சொல்வார்…?
காதல் ஒப்பனையற்ற நேயத்தின் நேசப்பரிமாற்றமென்று….!

✍️அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!