கசக்கிறாய்…
ஆனால் அருமருந்தாய் இரத்த சர்க்கரை க்கு நீ அரு மருந்தாம்… ஆம் இயற்கையில் கிடைக்கும் உன்னத மகத்துவம்… கசப்பில் உள்ளது நிறைய நன்மையென நிரூபிக்க வந்த ஏழையின் மகத்தான வரப்பிரசாதமான காய்கறி நீ… பக்குவமாய் உண்டால் பல்வேறு மருத்துவ உபகாரம் செய்பவள் நீ…பத்தியம் இருக்க உகந்தவளும் நீ… சிறுவயதில் வெறுத்தாலும் முதிய வயதில் கட்டாயமாக உண்ண வேண்டியவள் நீ… இன்பமும் துன்பமும் இணைந்தது தான் வாழ்க்கை என்பதை நிரூபிக்க வந்த வரப்பிரசாதம் கசப்பும் இனிப்பும் கலந்த வாழ்க்கை வாழ்வதே சிறப்பென நீ இன்றி நானில்லை நான் இன்றி நீயில்லை என இல்லறத்தையும் இணைத்து சொல்லவதே நல்லறமாய் பாகற்காய் மணக்கும்…
படம் பார்த்து கவி: கசக்கிறாய்
previous post
