படம் பார்த்து கவி: கந்தல் துணி

by admin 2
172 views

கந்தல் துணி கட்டிய
சாவி கொத்திருக்கு
ஐந்து சாவி அதிலிருக்கு
ஒன்றோடு ஒன்று உரசி
உண்டாக்கும் ஒலியாலே
திருட்டை அது தடுக்கும்

பூட்டுக்கு ஒரு சாவியிருக்கும்
ஐந்து சாவியும்
ஒரு பூட்டுக்கா இருக்கும்

அவள் மனம் எனும் கதவை
பூட்டிய பூட்டை திறக்க
அன்பு அறிவு அசல் அஞ்சாமை அழகு
என ஐந்து சாவி வேண்டும்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!