படம் பார்த்து கவி: காலியாக உள்ளாய்

by admin 2
49 views

காலியாக உள்ளாய் உனை பார்க்கும் போது குழந்தையின் மனதை போல் அழகாக உள்ளாய்…
கலர் கலராய் அடிக்கி வைத்து அழகும் பார்க்கும் பொழுது குமரி பெண்ணைப் போல் மிகவும் அழகாய் ஜொலிக்கிறாய்…
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கலைந்து கிடக்கும் பொழுது
தோல் சுருங்கிய பாட்டியைப் போல் வதங்கி கிடக்கிறாய்…
ஏ அலமாரியே உனை அடுக்கி வைத்தால் அழகாகவும் கலைந்து கிடந்தால் கோவமாகவும்
மாற்றுகிறாயே பாவமல்லவோ நான்????

🌸கயல்விழி🌸

You may also like

Leave a Comment

error: Content is protected !!