படம் பார்த்து கவி:  சந்திரனே சொந்தமென

by admin 1
110 views

வண்ணமயமாய் வானெலாம் ஒளிர்ந்திடினும்

எண்ணமேனோ நிலவினையே நாடிடுதே

பிறை மதியென சிறுவொளியாயினும்

நிறையொளிதரும் முழு மதியாயினும்

பிற ஒளியிலிலா பேரின்பம்

பிறை ஒளியிலும் பெற்றேனே

மறைமதியிலும் மனம் முழுவதும்

நிறை ஒளியின் நினைவுகளே

விண்ணிலுள ஒளி எதுவாகினும்

எண்ணிலடங்கா ஒளியது உமிழ்ந்தாலும்

சந்திர ஒளி போல்

சொந்தமென சிந்தை நிறையுதில்லையே

குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!