படம் பார்த்து கவி: தாயின் மடியோ??

by admin 2
40 views

அயராது உழைத்தவர்கள்
களைப்பு நீங்க தங்கள்
சிரம் வைத்தால் போதும்
தாயின் மடியில் வைத்த
சேயின் களைப்பு நீங்க
வைக்கும் நீயும்
அனைவரும் விரும்பும்
தாயின் மடியோ?…….
உன் வடிவம் பிடித்தவர்
அங்கத்தின் எப்பாகத்தையும் பங்கமின்றி வைக்கத் தோன்றுவதால்
சங்கத்தமிழ் போல் நீ
இனிமையானது ஒரு பொருளன்றோ? உன்னைத் தேடுபவருக்கு
கண்ணை மூட வைத்து
காட்டுவது சொர்க்கம்….

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!